search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள் கடத்தல்"

    • முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர்.
    • திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்.

    புதுச்சேரியில் இருந்து நேற்று திண்டிவனத்திற்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் இணையத்பாஷா தலைமையில் பே45ாலீசார், திண்டிவனம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது, ரோஷணை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் 48 மதுபாட்டில்களை கொண்ட 20 அட்டைப்பெட்டிகளில், மொத்தம் 1,960 மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து, திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    மதுபாட்டில்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரமாகும். அதன் பேரில் கார் ஓட்டி வந்த முருங்கப்பாக்கம் சிவசக்தி நகரை சேர்ந்த கெஜராஜ்(வயது34) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், இவர் மீது ரோஷணை, கிளியனூர், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவில், ஏற்கனவே மதுகடத்தல் வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 மோட்டார் சைக்கிளில் மதுபானம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • 100 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் மயிலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்குளி பகுதியில் நேற்று வாகன சோதனையை செய்தார். அப்போது அந்த வழியாக இரண்டு நபர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படி வந்தனர். உடனே போலீசார் அவர்களை நிறுத்திவிசாரணை செய்தனர். விசாரணையில் புதுவை மாநிலத்திலிருந்து திண்டிவனம் செய்யாருக்கு மதுபானம் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இளநீர் குன்றம் ஏரிக்கரைபகுதியை சேர்ந்த ராஜா (வயது 32) அத்தி கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (21) இருவரை யும் கைது செய்தனர். அவர்களி டமிருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது.

    ×